திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன்படி கடந்த திங்கள்கிழமை வரையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,938 ஆக உள்ளது. இந்த நிலையில், திருப்பூர் தென்னம்பாளையம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வரும் 43 வயது நபர் கடந்த சில நாள்களுக்கு முன்பாக புதுக்கோட்டைச் சென்றுள்ளார்.
இதன் பிறகு இரு நாள்களுக்கு முன்னர் பணிக்குத் திரும்பிய அவருக்கு காய்ச்சல், சளி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், தென்னம்பாளையம் டாஸ்மாக் கடையில் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கிருமி நாசினி தெளித்தனர். மேலும், கடையில் பணியாற்றி வரும் இருவருக்குப் பரிசோதனை நடத்தியதுடன், செவ்வாய், புதன்கிழமை என 2 நாள்களுக்கு டாஸ்மாக் கடையை மூடவும் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


