தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

சென்னையில் 47 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள்: 25 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இதுவரை 47,876 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News image
சென்னையில் 47 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள்: 25 லட்சம் பேர் பங்கேற்பு
Updated On :17 செப்டம்பர் 2020, 7:30 am

DIN

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இதுவரை 47,876 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் இதுநாள் வரை 47,876 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 25,01,908 பேர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் கரோனா அறிகுறியுடன் இருந்த 1,41,106 பேரிடம் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 6 மண்டலங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 

கரோனா அறிகுறி மற்றும் காய்ச்சல் இருப்பவர்களைக் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னையில் காய்ச்சல் முகாம்களை தமிழக சுகாதாரத் துறை தீவிரமாக நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.