இந்நிகழ்வில் 47 வழக்குகளில் அறியப்பட்ட இளஞ்சிறார்கள் காவல் துறை ஏற்பாட்டின் பேரில் பங்குபெற்றனர். இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் விஷ்ணு, கலந்து கொண்டு துவக்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் சிறப்புரை வழங்கி இளஞ்சிறார்கள் சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமகனாகவும் குற்றம் மறந்து சுற்றம் அறிந்து தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் பாதுகாக்கும் நல்ல மனிதர்களாக மாற்றுவதற்கு இந்த பயிற்சி உதவும் என்றும், சமுதாய வளர்ச்சியில் தமிழக அரசும், காவல் துறையும் எடுக்கும் இந்நிகழ்வு பல இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தும் என்று வாழ்த்தினார்.