மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குற்றப்பின்னணியுடைய இளஞ்சிறார்களுக்கு திறன் பயிற்சி

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வழக்குகளின் மூலம் அறியப்பட்ட இளஞ்சிறார்களுக்கான தொழிற்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர

News image
குற்றப்பின்னணியுடைய இளஞ்சிறார்களுக்கு திறன் பயிற்சி
Updated On :21 செப்டம்பர் 2020, 9:52 am

DIN

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வழக்குகளின் மூலம் அறியப்பட்ட இளஞ்சிறார்களுக்கான தொழிற்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

குற்ற வழக்குகளில் கண்டறியப்பட்ட இளஞ்சிறார்களை மீட்டு நல்வழிப்படுத்த சென்னை பெருநகர காவல் துறையினர் தமிழக அரசின் வழிகாட்டுதல்களோடு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் சென்னை பெருநகர காவல் துறை இணைந்து இளஞ்சிறார்கள் மற்றும் வேலை நாடுநர்களுக்கான சிறப்பு தொழில் நெறி மற்றும் திறன் பயிற்சிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (21.09.2020) காலை 11.00 மணியளவில் கிண்டியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 47 வழக்குகளில் அறியப்பட்ட இளஞ்சிறார்கள் காவல் துறை ஏற்பாட்டின் பேரில் பங்குபெற்றனர். இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் விஷ்ணு, கலந்து கொண்டு துவக்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் சிறப்புரை வழங்கி இளஞ்சிறார்கள் சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமகனாகவும் குற்றம் மறந்து சுற்றம் அறிந்து தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் பாதுகாக்கும் நல்ல மனிதர்களாக மாற்றுவதற்கு இந்த பயிற்சி உதவும் என்றும், சமுதாய வளர்ச்சியில் தமிழக அரசும், காவல் துறையும் எடுக்கும் இந்நிகழ்வு பல இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தும் என்று வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் கூடுதல் ஆணையாளர் முனைவர் ஆர்.தினகரன், (தெற்கு) இணை ஆணையாளர் ஏ.ஜி.பாபு,  (தெற்கு மண்டலம்) அடையாறு துணை ஆணையாளர் விக்ரமன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.