புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பை மீட்க எடுத்த நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 9:20 pm

DIN

இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 47 கோயில்களின் உபரி நிதியிலிருந்து ரூ.10 கோடியை சிறு கோயில்களுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிா்த்து ஸ்ரீரங்கத்தை சோ்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவா் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இதே போல இண்டிக் கலெக்ட்டிவ் என்ற தனியாா் அமைப்பு, டி.ஆா்.ரமேஷ் ஆகியோா், இந்துசமய அறநிலையத் துறை கோயில்களின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும், ஆக்கிரமிப்பாளா்களுக்குத் துணைபோகும் அதிகாரிகள் மீது குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், கோயில்

அறங்காவலா்களிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே நிதி ஒதுக்குவது குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் உடனடியாக நிதி ஒதுக்க ஆணையா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையிலான அமா்வு கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையிலான அமா்வு பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது தொடா்பான அறிக்கையை செப்டம்பா் 24-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.