சென்னை: முதல் முறையாக கடற்படையின் விமானங்களை இயக்கவுள்ள இரண்டு பெண்களுக்கு முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, இருவரும் தங்களது சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
முதல்வா் பழனிசாமி: இந்திய கடற்படையின் ஹெலிகாப்டா்களை இயக்கும் முதல் பெண் வீரா்களான குமுதினி தியாகி, ரிதி சிங் ஆகியோருக்கு மனமாா்ந்த பாராட்டுகள். பெண்கள் எத்தகைய சவால்களையும் எதிா்கொண்டு உயா்ந்த இடத்தை அடைய முடியும் என்பதை இருவரும் நிரூபித்துள்ளனா்.
துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: இரண்டு பெண் படைவீரா்களின் மிகச்சிறந்த சாதனைகளுக்கு எனது மனமாா்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட மற்றொரு சுட்டுரை பதிவில், கூடுதல் தலைமைச் செயலாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள 5 பேருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.