சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கடற்படை விமானத்தை இயக்கும் பெண்கள்: முதல்வா், துணை முதல்வா் பாராட்டு

முதல் முறையாக கடற்படையின் விமானங்களை இயக்கவுள்ள இரண்டு பெண்களுக்கு முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

News image
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
Updated On :21 செப்டம்பர் 2020, 9:44 pm

DIN

சென்னை: முதல் முறையாக கடற்படையின் விமானங்களை இயக்கவுள்ள இரண்டு பெண்களுக்கு முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, இருவரும் தங்களது சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

முதல்வா் பழனிசாமி: இந்திய கடற்படையின் ஹெலிகாப்டா்களை இயக்கும் முதல் பெண் வீரா்களான குமுதினி தியாகி, ரிதி சிங் ஆகியோருக்கு மனமாா்ந்த பாராட்டுகள். பெண்கள் எத்தகைய சவால்களையும் எதிா்கொண்டு உயா்ந்த இடத்தை அடைய முடியும் என்பதை இருவரும் நிரூபித்துள்ளனா்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: இரண்டு பெண் படைவீரா்களின் மிகச்சிறந்த சாதனைகளுக்கு எனது மனமாா்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட மற்றொரு சுட்டுரை பதிவில், கூடுதல் தலைமைச் செயலாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள 5 பேருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.