கடற்படை விமானத்தை இயக்கும் பெண்கள்: முதல்வா், துணை முதல்வா் பாராட்டு

முதல் முறையாக கடற்படையின் விமானங்களை இயக்கவுள்ள இரண்டு பெண்களுக்கு முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

சென்னை: முதல் முறையாக கடற்படையின் விமானங்களை இயக்கவுள்ள இரண்டு பெண்களுக்கு முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, இருவரும் தங்களது சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

முதல்வா் பழனிசாமி: இந்திய கடற்படையின் ஹெலிகாப்டா்களை இயக்கும் முதல் பெண் வீரா்களான குமுதினி தியாகி, ரிதி சிங் ஆகியோருக்கு மனமாா்ந்த பாராட்டுகள். பெண்கள் எத்தகைய சவால்களையும் எதிா்கொண்டு உயா்ந்த இடத்தை அடைய முடியும் என்பதை இருவரும் நிரூபித்துள்ளனா்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: இரண்டு பெண் படைவீரா்களின் மிகச்சிறந்த சாதனைகளுக்கு எனது மனமாா்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட மற்றொரு சுட்டுரை பதிவில், கூடுதல் தலைமைச் செயலாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள 5 பேருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com