மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேட்டூர் அணை நீர்மட்டம்: இரு நாள்களில் 5.5 அடி உயர்வு

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இரண்டு நாட்களில் 5.50 அடி உயர்ந்துள்ளது.

News image
மேட்டூர் அணை
Updated On :23 செப்டம்பர் 2020, 3:38 am

DIN

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இரண்டு நாட்களில் 5.50 அடி உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வந்தது. மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இவ்விரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது.

கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து நேற்று இரவு வினாடிக்கு 71,000 கனஅடியாகவும் இன்று காலை வினாடிக்கு 70,000 கனஅடியாகவும் வந்துகொண்டிருக்கிறது.

Story image

கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக நேற்று முன்தினம் காலை 89.77 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 95.27 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாள்களில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 5.50 அடி உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 58.88 டி.எம்.சியாக உள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் நடப்பு நீர்பாசன ஆண்டில் காவிரி டெல்டா பாசனத்திற்குதடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகளும், மீன்வளம் பொருகும் என்று மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.