மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கரோனா இறப்பு விகிதத்தை 1% -க்கும் குறைவாக கொண்டு வருவதே அரசின் குறிக்கோள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதத்தை 1% -க்கும் குறைவாக கொண்டு வருவதே அரசின் குறிக்கோள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

News image
அமைச்சர் விஜயபாஸ்கர்
Updated On :24 செப்டம்பர் 2020, 1:19 pm

DIN

தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதத்தை 1% -க்கும் குறைவாக கொண்டு வருவதே அரசின் குறிக்கோள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: 

தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் 1.6% ஆக இருந்த கரோனா இறப்பு விகிதம் 1.2% ஆக குறைந்துள்ளது. இதனை 1% -க்கும் குறைவாக கொண்டு வருவதே தமிழக அரசின் குறிக்கோள். 

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90.2% ஆக உள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றை கண்டறிய பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது. தமிழகத்தில் கரோனா பரிசோதனையில் தொற்று விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது

பரிசோதனை செய்யப்படுவோரில் 6.4%பேருக்கு தான் கரோனா தொற்று உள்ளது எந்த மாவட்டத்திலும் கரோனா தொற்று விகிதம் 10%-க்கு மேல் அதிகரிக்காமல் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனை 5% க்கும் குறைவாக கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.