தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கலவையில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 45 பேர் கைது

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலவையில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலவையில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்.
Updated On :25 செப்டம்பர் 2020, 9:08 am

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலவையில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் விளைபொருள்களுக்கான உத்தரவாத சட்டம் அத்தியாவசிய உணவு பொருள் சட்டம் விவசாயிகளுக்கு எதிராகவும் கார்ப்பரேட்டுகளுக்கு உள்ளதாகவும் அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ரகுபதி தலைமை வகித்தார்.

இதில், திமிரி வட்டார தலைவர் ஆதி மூலம் செயலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 45 பேரை கலவை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.