தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

உசிலம்பட்டியில் விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் சாலை மறியல்

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டியில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட கூட்டணி கட்சியினரை காவலர்கள் கைது செய்தனர். 

News image
சாலை மறியலில் ஈடுபட்ட கூட்டணி கட்சியினர்.
Updated On :25 செப்டம்பர் 2020, 6:17 am

DIN


வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டியில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட கூட்டணி கட்சியினரை காவலர்கள் கைது செய்தனர். 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டியில் விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் இ.கம்யூனிஸ்ட், மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்ட் பிளாக், மக்கள் அதிகாரம், விடுதலைச் சிறுத்தைகள், அகில இந்திய விவசாய சங்கம், மக்கள் அதிகாரம் கூட்டணி கட்சியினர் சாலை மறியல் செய்தனர். 

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பிவி கதிரவன் தலைமையில் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் காளிதாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் மற்றும் கூட்டணிக் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவலர்கள் கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.