சிவகாசியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
சிவகாசியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சிவகாசியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச் சங்கம் சிவகாசி கிளை சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு அரசு மாதம் ரூ.7500 வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் சிவகாசி கிளைத்தலைவர் நாகூர் மீரான் தலைமை வகித்தார். இதில் இரு பெண்கள் உள்பட 15 பேர் கலந்து கொண்டனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...