பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கம்பத்தில் கழிவுநீர் தெருவில் செல்வதால் நோய்த்தொற்று அபாயம்

தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன் குளத்தெருவில் பாலம் இடிந்துள்ளதால், சாக்கடை கழிவுநீர் தெருவில் செல்வதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image
தெருவில் செல்லும் சாக்கடை கழிவுநீர்
Updated On :26 செப்டம்பர் 2020, 8:56 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன் குளத்தெருவில் பாலம் இடிந்துள்ளதால், சாக்கடை கழிவுநீர் தெருவில் செல்வதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் 9 வது வார்டு தாத்தப்பன் குளத்தெருவில் பாலம் இடிந்துள்ளது. இதில் செல்லும் சாக்கடை கழிவுநீர் தெருவில் ஒடுகிறது.  

இதனால் தெருவில் உள்ள சிறுவர், சிறுமியர் கழிவு நீரை மிதித்து நடந்து செல்கின்றனர்.

தற்போது மழைக்காலம் என்பதால் நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இதனால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவில் செல்லும் கழிவுநீரை அப்புறப்படுத்தி  நோய்த்தொற்று பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகப்பன் குளம் ஒன்பதாவது தெரு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.