இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தினமணி இணையதள செய்தி எதிரொலி: கூத்தாநல்லூரில் நில வரித் திட்டத்திற்கு ஆணை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் நகர நிலவரித் திட்ட அலகு தொடங்குவதற்காக, சென்னை நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.  

News image
கூத்தாநல்லூரில் நில வரித் திட்டத்திற்கு ஆணை
Updated On :9 டிசம்பர் 2020, 10:46 am

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் நகர நிலவரித் திட்டம் கொண்டு வர வலியுறுத்தி, கடந்த மாதம் 16ஆம் தேதி, இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. அச்செய்தியின் எதிரொலியாக, நகர நிலவரித் திட்ட அலகு தொடங்குவதற்காக, சென்னை நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். 

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும்700க்கும் மேற்பட்டவர்களுக்கு, பத்திரம் இருந்தும், பட்டா வழங்கப்படவில்லை. நகர நிலவரித் திட்டத்தை ஏற்படுத்தினால், பட்டா வழங்கலாம். திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர் உள்ளிட்ட நகராட்சிகளில் நில வரித் திட்டம் ஏற்படுத்தப்பட்டு, அதற்குரியப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், கூத்தாநல்லூர் நகராட்சியில் மட்டும் தொடங்கப்படவில்லை என்ற செய்தியை, தினமணி இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டன.

செய்தியின் எதிரொலியாக, கூத்தாநல்லூர் நகராட்சியில், நிலவரித் திட்டப் பணிகள் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டி நகரத்தில் நடைபெற்ற நகர நிலவரித் திட்டப் பணிகள் முடிவு பெற்றது. அதைத் தொடர்ந்து, கூத்தாநல்லூர் நகரத்தில் வருவாய் பின் தொடர் பணிகளை மேற்கொள்ளவும், புதிய நகர வருவாய் பின் தொடர் பணி நிலவரித் திட்ட வட்டாட்சியர் டிசம்பர் 3ஆம் தேதி முதல் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, நகர நிலவரித் திட்ட வட்டாட்சியர், நிலவரித் திட்ட ஆய்வாளர்கள், சார் ஆய்வாளர், நில அளவர், முதுநிலை வரைவாளர், அலுவலக உதவியாளர் மற்றும் புல உதவியாளர் உள்ளிட்டவர்களை நியமனம் செய்யப்படுவார்கள். அதைத்தொடர்ந்து, கூத்தாநல்லூர் நகரத்தில், நிலவரித் திட்டப் பணிகள் நடைபெறும். நில வரித் திட்டத்தால், பத்திரம் இருந்தும் பட்டா இல்லாமல் இருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும். 

ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், ஏழை, எளிய மக்கள் உள்ளிட்டோர் பயன் பெறுவார்கள். பட்டா பெறப்படுவதால், அரசின் அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.