முக்கியமாக கடந்த அக்டோபா் மாதம் வேலூா் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலா் எம்.பன்னீா்செல்வம் அலுவலகத்தில் இருந்து ரூ.33.73 லட்சமும்,அவரது வீட்டில் இருந்து ரூ.3.35 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டன. அதற்கு அடுத்தப்படியாக சென்னை சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளா் பாண்டியன் வீட்டில் இருந்து அண்மையில் ரூ.1.37 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. சோதனை அதிகமாக பதிவுத்துறை அலுவலகங்களிலும்,போக்குவரத்து அலுவலகங்களிலும் நடைபெற்றுள்ளன. மூன்று மாதங்களில் 32 பதிவுத்துறை அலுவலகங்களும், சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும், 20 போக்குவரத்து அலுவலகங்கள்,சோதனைச் சாவடிகளிலும் சோதனை நடைபெற்றுள்ளன.