சென்னையில் 2,082 பேர்; பிற மாவட்டங்களில் 2,247 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு நிலவரம்

சென்னையில் அதிகபட்சமாக 2,082 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் மொத்த பாதிப்பு 64,689 ஆக அதிகரித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 4,329 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதில், சென்னையில் அதிகபட்சமாக இன்று 2,082 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் மொத்த பாதிப்பு 64,689 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று புதிதாக 2,247 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 330 பேருக்கும், மதுரையில் 287 பேருக்கும், திருவள்ளூரில் 172 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com