சென்னையில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,257 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று புதிதாக 1,843 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,257 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 120 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக பாதித்தோர் பற்றிய விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..