நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சென்னையில் ஒரேநாளில் கரோனாவுக்கு 28 பேர் பலி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கரோனாவுக்கு 28 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2020, 6:35 am

DIN

சென்னையில் ஒரேநாளில் கரோனாவுக்கு 28 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,245 ஆகவும், பலி எண்ணிக்கை 422 ஆகவும் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் 49 பேர் பலியானதாக தமிழக அரசு தகவல் தெரிவித்திருந்தது. 

முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.