சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,136 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று நிலவரம் பற்றிய விவரங்கள் அடங்கிய செய்திக் குறிப்பை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 2,516 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,380 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 156 பேருக்கும், செங்கல்பட்டில் 146 பேருக்கும், மதுரையில் 137 பேருக்கும், திருவண்ணாமலையில் 110 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..