மாசிமகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேசுவரர் திருக்கோயிலில் தேரோட்டத் திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் இக்கோயிலில் மாசி மாதத்தில் தேரோட்டத் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டுக்கான மாசிமக விழா பிப்ரவரி 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டமும், காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரோட்டமும் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இத்தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
இதைத் தொடர்ந்து நாளை (7-ம் தேதி) இரவு சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது. வருகிற 8-ம் தேதி காலை 9 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகள் விதி உலா, மகாமக குளக்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காலை 10.15 மணி முதல் 11.45 மணி வரை மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் மக்களைக் கவரும் வாக்குச்சாவடி! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் டோக்கன் விநியோகம்!

கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


