தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

என்.எல்.சி. விபத்தில் தொழிலாளி பலி

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

News image

என்.எல்.சி. விபத்தில் தொழிலாளி பலி

Updated On :17 நவம்பர் 2020, 9:13 am IST


நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி, 21-ஆவது வட்டத்தில் வசித்து வந்தவர் ராமசாமி மகன் சக்திவேல்(52). இவர் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் இண்கோசர்வ் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

திங்கள்கிழமை இரவு இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 6-ஆவது அலகில் பணியாற்றியபோது நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட்டில் கை சிக்கி பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக ரத்தப்போக்கு காரணமாக அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.