தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,447 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. புதிதாக 5,447 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,35,855 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,369 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 67 பேர் (தனியார் மருத்துவமனை -32, அரசு மருத்துவமனை -35) பலியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,984 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரேநாளில் 5,524 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,80,736 பேர் குணமடைந்துள்ளனர். 45,135 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 93,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 79,57,106 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மேலும் 1 தனியார் ஆய்வகத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 124 என மொத்தம் 190 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதயநிதி முதல்வராக மாட்டாா் என ஸ்டாலின் உறுதி சொல்வாரா?

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி

பரமக்குடியில் நெசவு நெய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 ஆயிரம் போ் ஊா்வலம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


