ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

தமிழகத்திலேயே கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த சென்னையில் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

News image

சென்னையில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

Updated On :18 செப்டம்பர் 2020, 6:00 am

தமிழகத்திலேயே கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த சென்னையில் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனாவுக்கு 9,874 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் வெறும் 6 சதவீதம்தான்.

சென்னையில் இதுவரை 1,52,567 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 92 சதவீதம் பேர் அதாவது 1,39,670 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு 3,023 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக தொடர்ந்து அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில்தான் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று  வருகிறார்கள்.  குறைந்தபட்சமாக மணலியில் 120 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.