தமிழகத்தில் புதிதாக 5,647 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 5,647 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் புதிதாக 5,647 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5,647 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,75,017 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,187 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 85 பேர் (அரசு மருத்துவமனை -50, தனியார் மருத்துவமனை -35) பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 9,233 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் 5,612 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,19,448 பேர் குணமடைந்துள்ளனர். 46,336 பேர் இன்னும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 94,037 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 70,04,558 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com