முசிறி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக செல்வராஜ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில் அவருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
முன்னதாக, நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், மாநில முதல்வர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.