தமிழகத்தில் புதிதாக 5,589 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,589 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,589 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,589 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,283 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,86,397 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 70 பேர் (அரசு மருத்துவமனை -41, தனியார் மருத்துவமனை -29) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,383 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் ஒரே நாளில் 5,554 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,30,708 பேர் குணமடைந்துள்ளனர். 46,306 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 80,465 மாதிரிகள் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 71,81,125 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் கோவையில் தலா 1 பரிசோதனை ஆய்வகங்களுக்கு புதிதாக அனுமதியளிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, மொத்த கரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 118. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com