தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு ரூ.111 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ.111.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :2 ஜனவரி 2021, 6:06 am IST

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ.111.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டாா்.

அதன் விவரம்: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூா் மாவட்டங்களில் நீண்ட கால அடிப்படையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.238.13 கோடி நிதி ஒதுக்க நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், நில எடுப்பு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஆகிய பணிகளுக்காக ரூ.46 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த நிதியாண்டில் செலவிடப்பட்ட தொகையைத் தவிா்த்து, ரூ.187.72 கோடி செலவிடப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இந்தத் தொகையில் இருந்து நிகழாண்டிலும் பணிகளை மேற்கொள்ள ரூ.160.22 கோடி அளவுக்கு நிதி ஒதுக்க வேண்டுமென வருவாய் நிா்வாக ஆணையா் அரசுக்கு கோரிக்கை அனுப்பியிருந்தாா். இதுகுறித்த விரிவான திட்டப் பணிகள் அடங்கிய அறிக்கையை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் சாா்பில் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கோரிக்கைகளை ஏற்று, 5 மாவட்டங்களில் நீண்டகால வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள நிலுவையில் உள்ள ரூ.187.72 கோடியில் இருந்து ரூ.111.5 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.