நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

துறையூர், உப்பிலியபுரம் ஒன்றியங்களில் மினி கிளினிக் தொடக்கம்

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றியங்களில் தலா ஒரு மினி கிளினிக் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

News image

மினி கிளினிக்கை தொடக்கி வைத்த முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அங்கு ஒரு பெண்ணுக்கு ரத்த அழுத்தம் பரிசோதிப்பதைக் கவனிக்கிறார்.

Updated On :4 ஜனவரி 2021, 2:54 pm IST

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றியங்களில் தலா ஒரு மினி கிளினிக் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

துறையூர் தொகுதிக்குள் முதல்கட்டமாக துறையூர் ஒன்றியத்தில் விசாலாட்சியம்மாள் சமுத்திரம் ஊராட்சியிலும், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தளுகை ஊராட்சிக்குள்பட்ட த.பாதர்பேட்டை கிராமத்திலும் மினி கிளினிக்குகள் தொடக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான மு.பரஞ்சோதி மினி கிளினிக்குகளை ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் தொடக்கி வைத்து அதிமுக அரசின் சாதனைகள் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

மினி கிளினிக்கை தொடக்கி வைத்து அங்கு கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை ஒரு கர்ப்பிணிப் பெண்ணிடம் வழங்குகிறார் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி.

மினி கிளினிக்கை தொடக்கி வைத்து அங்கு கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை ஒரு கர்ப்பிணிப் பெண்ணிடம் வழங்குகிறார் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி.

நிகழ்ச்சியில் துறையூர் முன்னாள் எம்எல்ஏ த. இந்திராகாந்தி, துறையூர் வடக்கு ஒன்றிய செயலர் சேனை செயலர், வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலர் ஏ. அன்புபிரபாகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் விசாலாட்சியம்மாள் சமுத்திரம் ஊராட்சி தலைவர்கள் வசந்தாதேவி(வி.ஏ.சமுத்திரம்), கலைசெல்வி(தளுகை), ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரண்யா ஜெய்சங்கர், அத்தியப்பன், முத்துக்குமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர்கள் பி.செந்தில்குமார்(துறையூர்), மணிமேகலை(உப்பிலியபுரம்) உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.

மினிகிளினிக் மருத்துவர்கள் ஜி. முத்துக்குமார்(வி.ஏ.சமுத்திரம்), செல்தில்குமார்(தளுகை) ஆகியோர் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்ற பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு தருகிற அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் வி.ஏ.சமுத்திரத்தில் 10 பேருக்கும், தளுகையில் 12 பேருக்கும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.