முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ஜன.10-ல் கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்

பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்யக் கோரி ஜன.10-ல் திமுக மகளிரணி சார்பில் பொள்ளச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image

மு.க.ஸ்டாலின்.

Updated On :7 ஜனவரி 2021, 7:51 pm IST

பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்யக் கோரி ஜன.10-ல் திமுக மகளிரணி சார்பில் பொள்ளச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்பட பல இடங்களில் இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல்ரீதியாகத் துன்புறுத்தி, விடியோ எடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் 2019 பிப்ரவரியில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வழக்கில் பொள்ளாச்சியைச் சோ்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமாா், வசந்தகுமாா், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னதாக இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்தனா். 2019 மாா்ச் முதல் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதனிடையே வழக்கில் கைதான 5 பேரின் கூட்டாளிகளான பொள்ளாச்சி, வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் அருளானந்தம் (34), பழனிசாமி மகன் பாபு (எ) பைக் பாபு (27), ஆச்சிப்பட்டி, அ.சங்கம்பாளையம், கற்பக விநாயகா் நகரைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ஹேரேன்பால் (29) ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்து கோவை அழைத்து வந்தனா். இதில் கைதான அருளானந்தம் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளராகப் பதவி விகித்து வந்தாா். 

இந்த நிலையில் பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்யக் கோரி ஜன.10-ல் கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக மகளிரணி சார்பில் பொள்ளச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.