தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

ஆற்காடு குமரகிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலைப் பாதை: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்

ஆற்காடு அடுத்த குமரகிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலைப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். 

News image

ஆற்காடு அடுத்த குமரகிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலைப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

Updated On :8 ஜனவரி 2021, 12:27 pm IST

ஆற்காடு அடுத்த குமரகிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலைப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். 

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த குமரகிரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நீண்டகாலமாக மலைப்பாதை அமைக்க அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்நிலையில், சுமார் 3 கோடி மதிப்பிலான மலைப் பாதை அமைக்க அறநிலைத் துறை சார்பாக அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. 

இதையடுத்து மலைப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

இதில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், அறநிலைத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.