அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து முதல்வர் தலைமையில் போராட்டம் தொடக்கம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை புதுச்சேரியில் இருந்து வெளியேறத் கோரி முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை போராட்டம் தொடங்கப்பட்டது.

News image

புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை புதுச்சேரியில் இருந்து வெளியேறக் கோரி போராட்டம் தொடங்கப்பட்டது.

Updated On :8 ஜனவரி 2021, 11:47 am IST


புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை புதுச்சேரியில் இருந்து வெளியேறத் கோரி முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை போராட்டம் தொடங்கப்பட்டது.

புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்தும் கிரண்பேடி வெளியேறக் கோரி ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்தன.

இந்நிலையில், புதுச்சேரியில் பல்வேறு முக்கிய அலுவலகங்கள் முன்பு 144 தடை உத்தரவு புதன்கிழமை முதல் போடப்பட்டது.

ஆளுநர் மாளிகை பாதுகாப்புக்காக 3 கம்பெனிகள் கொண்ட துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Story image

இதற்கிடையே புதுச்சேரி அண்ணா சிலை முதல் வெங்கட்ட சுப்பா ரெட்டியார் சிலை வரை போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை முதல் ஜன.11 ஆம் தேதி வரை தொடர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முதல்வர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆனால் பிரதான கூட்டணி கட்சியான திமுக பங்கேற்கவில்லை. கடந்த ஒரு மாதமாகவே காங்கிரஸ் தலைமையில் நடக்கும் போராட்டத்தை திமுக புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.