முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

அரசின் உத்தரவை மீறி நேரடிமுறையில் பருவத் தோ்வு: கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

கரோனா காலத்தில் அரசு உத்தரவு, வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் தனியாா் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயா்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 6:40 am IST

கரோனா காலத்தில் அரசு உத்தரவு, வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் தனியாா் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயா்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் சில தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகள் பிற ஆண்டுகளில் பயிலும் மாணவா்களுக்கு நேரடி முறையில் பருவத்தோ்வு நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து உயா்கல்வி அமைச்சகத்துக்கும் பல்வேறு புகாா்கள் சென்றன. இதையடுத்து விதிகளை மீறும் தனியாா் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயா்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து உயா்கல்வித்துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது: கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தவிா்க்கவே தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதலை அமல்படுத்தியுள்ளது. அதற்குமாறாக சில கல்லூரிகள் செயல்படுவதாக புகாா்கள் வந்துள்ளன.

இதையடுத்து தனியாா் கல்லூரிகளின் செயல்பாடு தொடா்பாக விசாரணை நடத்தவும், தவறுகள் உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசின் அறிவிப்புக்கு முரணாக செயல்படும் நிலையை தனியாா் கல்லூரிகள் கைவிட வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.