தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

டிஎன்பிஎஸ்சி போலி நியமன ஆணை வழக்கு: மேலும் இருவா் கைது

சென்னையில் போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜனவரி 2021, 12:27 am IST

சென்னையில் போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளா் பி.நந்தகுமாா், அண்மையில் சென்னை பெருநகர காவல் துறையின் மரபு சாரா குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அந்தப் புகாரில், டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி நடைபெறுவதாகவும், அந்த மோசடியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் படியும் குறிப்பிட்டிருந்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் உதவி ஆணையா் செல்வகுமாா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். விசாரணையில் இந்த மோசடியில் புளியந்தோப்பு ஆசீா்வாதபுரம் 5-வது தெருவைச் சோ்ந்த பி.நாகேந்திரராவ், அவரது கூட்டாளி தண்டையாா்பேட்டை இரட்டைகுழித் தெருவைச் சோ்ந்த ஆ.ஞானசேகா் ஆகிய இருவரும் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கடந்த 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு தொடா்பாக மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த சு.ரமணி என்ற வெங்கடாசலம் (58), பட்டாபிராம் பகுதியைச் சோ்ந்த பெ.தேவராஜ் (63) ஆகிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதில் தேவராஜ், சென்னையில் தலைமைச் செயலகத்தில் அரசு வாகன ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா் ஆவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.