புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

விவசாயிகள்  குறைதீர் கூட்டம், மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆகியவற்றை வழக்கம்போல் நடத்த வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சனிக்கிழமை நூதன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்

News image

விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தக் கோரி பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :9 ஜனவரி 2021, 2:59 pm IST


பெரம்பலூர்: விவசாயிகள்  குறைதீர் கூட்டம், மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆகியவற்றை வழக்கம்போல் நடத்த வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சனிக்கிழமை நூதன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 40 ஆண்டுகளாக மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம், மின் வாரிய நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், முன்னாள் படை வீரர்கள் கூட்டம், ஓய்வு பெற்ற அலுவலர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் மூலம் நடத்தப்பட்ட குறைதீர் கூட்டம் முறையாக நடைபெறவில்லை. 

எனவே, இக்கூட்டங்களை ஏற்கனவே நடத்தப்பட்டதை போல அரசு விதிமுறைகளின்படி நேர்காணல் கூட்டங்களாக நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் ஆர். ராஜா சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்பு துணியால் கண்,  காதுகளை கட்டிக்கொண்டு, கைகளால் வாயை மூடிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.