புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

திருப்பூரில் ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் ரூ.7 லட்சத்தை இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் ரூ.7 லட்சத்து 64 ஆயிரத்தை இழந்த கோவையைச் சேர்ந்த இளைஞர் திருப்பூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

News image

கோவையைச் சேர்ந்த எல்வின் பிரட்ரிக்

Updated On :9 ஜனவரி 2021, 12:46 pm IST

திருப்பூர்: ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் ரூ.7 லட்சத்து 64 ஆயிரத்தை இழந்த கோவையைச் சேர்ந்த இளைஞர் திருப்பூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருப்பூர் கொங்கு மெயின்ரோடு அருகே தண்டவாளத்தில் கடந்த 5 ஆம் தேதி தலை, உடல் தனித்தனியாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தவர் கோவையைச் சேர்ந்த எல்வின் பிரட்ரிக் (30) என்பது தெரியவந்தது. 

இவரை காணவில்லை என இவரது குடும்பத்தினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். 

இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.7 லட்சத்து 64 ஆயிரத்ததை இழந்ததால் கோவையில் இருந்து நடந்தே  திருப்பூருக்கு வந்து ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.