பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

நெல்லையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பொங்கலிடும் போராட்டம்

திருநெல்வேலியில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு பொங்கலிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை பொங்கலிடும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்.

Updated On :12 ஜனவரி 2021, 2:51 pm IST

திருநெல்வேலி: திருநெல்வேலியில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு பொங்கலிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கட்டட தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கியது போல் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கிட வேண்டும். திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் ஆர்டிஓ பெர்மிட் அடிப்படையில் இயங்கும் 11 ஆயிரம் ஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கும் வழங்க வேண்டும். 
கரோனா பொதுமுடக்க காலத்தில் வாழ்வாதாரம்  பாதிப்படைந்த அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மாதம் ரூ.7,500 வீதம் 6 மாதங்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். கட்டட தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் உபகரணங்கள் வழங்கியது போல் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கும் முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு கருவி, டூல்ஸ்பாக்ஸ் ஆகியவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பாளையங்கோட்டை திருமால்நகர் பகுதியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலர் ஆர்.மோகன் தலைமை வகித்தார். அலுவலகம் முன்பு மண் பானையில் கரும்பு தோரணங்களுடன் கோரிக்கை முழக்கத்துடன் பொங்கலிட்டனர். ஆட்டோ தொழிற்சங்க முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.