பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

நாடு முழுவதும் தங்கப் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும்: மத்திய அமைச்சர்

நாடு முழுவதும் தங்கப் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ராவ்சாகிப் படேல் தன்வே தெரிவித்துள்ளார்.

News image

நாடு முழுவதும் தங்கப் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும்: மத்திய அமைச்சர்

Updated On :12 ஜனவரி 2021, 2:28 pm IST


நாடு முழுவதும் தங்கப் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ராவ்சாகிப் படேல் தன்வே தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராவ்சாகிப் படேல் தன்வே, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை 2500 புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பேச இருப்பதாக மத்திய அமைச்சர் காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் அவர்கள் வாங்கும் தங்கத்தின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தங்க பரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.