பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

மானாமதுரை கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி கோயில்களில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. 

News image

மானாமதுரை வீரழகர் கோயிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவின்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் வீர ஆஞ்சனேயர் சுவாமி.

Updated On :12 ஜனவரி 2021, 1:23 pm IST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி கோயில்களில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. 

கோயில்தெரு பகுதியில் உள்ள வீரழகர் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தெற்குமுகம் நோக்கி அருள்பாலிக்கும் மகுடம் தரித்த மூலவர் வீர ஆஞ்சனேயருக்கு  அபிஷேகம் நடத்தி சுவாமி வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதன்பின் சிறப்புப்பூஜைகள் தீபாரதனைகள் நடைபெற்றது. 

உற்சவர் ஆஞ்சனேயருக்கும் பால், தயிர், சந்தனம், பன்னீர், திரவியப்பொருள்கள் உள்ளிட்டவற்றால் 16 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டு உற்சவமூர்த்தி மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஆஞ்சனேயரை தரிசனம் செய்தனர். 

மேலும், மானாமதுரை வைகையாற்றுப்பாலம் அருகேயுள்ள வால்கோட்டை ஆஞ்சனேயர் கோயில், ரயில்வே காலணியில் பூர்ணசக்கர விநாயகர் கோயிலில் உள்ள ஆஞ்சனேயர் சன்னதி, புரட்சியார்பேட்டை பகுதியில் உள்ள தியாக வினோதப் பெருமாள் கோயிலில் ஆஞ்சனேயர் சன்னதி, பிருந்தாவனம் தெருவில் உள்ள தாஸ ஆஞ்சனேயர்,வீர ஆஞ்சனேயர் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இக்கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி  தரிசனம் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.