பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

தொடர் மழை எதிரொலி சின்னமனூரில் செங்கரும்பு விற்பனை சரிவு

தேனி மாவட்டம் சின்னமனூரில் தொடர் மழை காரணமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கரும்பு விற்பனை சரிந்துள்ளது.

News image

தொடர் மழை எதிரொலி சின்னமனூரில் செங்கரும்பு விற்பனை சரிவு

Updated On :12 ஜனவரி 2021, 1:38 pm IST

உத்தமபாளையம்; தேனி மாவட்டம் சின்னமனூரில் தொடர் மழை காரணமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கரும்பு விற்பனை சரிந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை சூழ்ந்த பகுதியில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. முல்லைப் பெரியாறு பாசனம் மூலமாக இப்பகுதியில் நெல், வாழை ,தென்னை என பல்வேறு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சின்னமனூர் , உத்தமபாளையம் , சீலையம்பட்டி பகுதிகளில்  500 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு விவசாயம்  செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யப்படுவது வழக்கம் . இந்நிலையில் கடந்த சில நாட்களாக அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது சின்னமனூர் உட்பட மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் பொங்கல் பண்டிகைக்கு அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கரில் விளைவிக்கப்பட்ட செங்கரும்புகள் விற்பனை  ஆகாமல் தேங்கிக் கிடக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரே நாள் இருப்பதால் வெளிமாவட்ட வியாபாரிகள் வருகை குறைந்ததால் செங்கரும்பு விற்பனையும் சரிந்துள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கி  விளைவிக்கப்பட்ட செங்கரும்பு விற்பனையாகாமல் தோட்டத்திலேயே காட்சிப்பொருளாக நிற்பதால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.