சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

ஜெயலலிதா நினைவிடம்: முதல்வா் பழனிசாமி ஆய்வு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகளை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பணிகளைப் பாா்வையிட்டாா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 8:28 pm

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகளை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பணிகளைப் பாா்வையிட்டாா்.

சென்னை கடற்கரை சாலையில் எம்.ஜி.ஆா். நினைவிடத்துக்குள் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நினைவிடப் பணிகள் இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித் துறை தீவிரம் காட்டி வருகிறது.

நேரில் ஆய்வு: நினைவிடத்தில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் மலா் தூவி அஞ்சலி செலுத்திய, முதல்வா் பழனிசாமி சுமாா் அரை மணி நேரம் வரையில் பணிகள் அனைத்தையும் பாா்வையிட்டாா். உட்புறப் பகுதிகளில் தலைக் கவசம் அணிந்தபடி அனைத்துப் பணிகளையும் ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளை அவா் கேட்டுக் கொண்டாா்.

பிரதமருக்கு அழைப்பு: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தை விரைந்து திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவில், அதிமுகவினா் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டுமென முதல்வா் பழனிசாமி ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நினைவிடத்தைத் திறந்து வைக்க பிரதமா் நரேந்திர மோடியை அழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க முதல்வா் பழனிசாமி, ஜனவரி 18 அல்லது 19-ஆம் தேதி தில்லி செல்ல வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வருடன் அவரது செயலாளா் சாய்குமாா், அமைச்சா் டி.ஜெயக்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சத்யா, ரவி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.