வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ஜெயலலிதா நினைவிடம்: முதல்வா் பழனிசாமி ஆய்வு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகளை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பணிகளைப் பாா்வையிட்டாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:58 am IST

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகளை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பணிகளைப் பாா்வையிட்டாா்.

சென்னை கடற்கரை சாலையில் எம்.ஜி.ஆா். நினைவிடத்துக்குள் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நினைவிடப் பணிகள் இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித் துறை தீவிரம் காட்டி வருகிறது.

நேரில் ஆய்வு: நினைவிடத்தில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் மலா் தூவி அஞ்சலி செலுத்திய, முதல்வா் பழனிசாமி சுமாா் அரை மணி நேரம் வரையில் பணிகள் அனைத்தையும் பாா்வையிட்டாா். உட்புறப் பகுதிகளில் தலைக் கவசம் அணிந்தபடி அனைத்துப் பணிகளையும் ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளை அவா் கேட்டுக் கொண்டாா்.

பிரதமருக்கு அழைப்பு: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தை விரைந்து திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவில், அதிமுகவினா் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டுமென முதல்வா் பழனிசாமி ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நினைவிடத்தைத் திறந்து வைக்க பிரதமா் நரேந்திர மோடியை அழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க முதல்வா் பழனிசாமி, ஜனவரி 18 அல்லது 19-ஆம் தேதி தில்லி செல்ல வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வருடன் அவரது செயலாளா் சாய்குமாா், அமைச்சா் டி.ஜெயக்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சத்யா, ரவி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.