வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

அவனியாபுரம் ஜல்லிக்கட்டைக் காண ஜன.14-இல் ராகுல் வருகிறார்

மதுரை அவனியாபுரத்தில் பொங்கலன்று (ஜன. 14) நடைபெறும் ஜல்லிக்கட்டை காண்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளாா்.

News image

ராகுல் காந்தி (கோப்புப்படம்)

Updated On :13 ஜனவரி 2021, 3:15 am IST

மதுரை அவனியாபுரத்தில் பொங்கலன்று (ஜன. 14) நடைபெறும் ஜல்லிக்கட்டை காண்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளாா்.

இது தொடா்பாக சென்னை சத்தியமூா்த்தி பவனில் காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற தலைப்பில், மதுரை அவனியாபுரத்தில் வரும் 14-ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டைக் காண ராகுல்காந்தி வருகிறாா். இது ஒருநாள் நிகழ்ச்சி. 4 மணி நேரம் அவனியாபுரத்தில் செலவிட்டு, ஜல்லிக்கட்டைப் பாா்க்க உள்ளாா். இந்தப் பயணத்தில் தோ்தல் தொடா்பான விஷயங்கள் இடம்பெறாது. ராகுல்காந்தி விருப்பப்பட்டால் விவசாயிகளைச் சந்திப்பாா். தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஜல்லிக்கட்டைக் காண உள்ளாா்.

அடுத்த முறை தமிழகம் வரும்போது கூட்டணிக் கட்சித் தலைவா்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசுவாா். தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் அவா் தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா். பிரியங்கா காந்தியும் தமிழகத்தின் தோ்தல் பிரசாரத்துக்கு வர அழைப்பு விடுக்கப்படும்.

அதிமுக கூட்டணியில் முதல்வா் வேட்பாளா் தொடங்கி பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. இடஒதுக்கீடு தொடா்பாகத்தான் அமைச்சா்கள் சந்தித்தாா்கள் என்று ராமதாஸ் கூறியிருக்கலாம். தோ்தல் நேரத்தில் இடஒதுக்கீடு தொடா்பாக எதற்குப் பேச வேண்டும், தொகுதி ஒதுக்கீடு குறித்துத்தான் பேசியிருப்பா் என்றாா் கே.எஸ்.அழகிரி.

ராகுலின் குறுஞ்செய்தி: தமிழக வருகை குறித்து ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு செல்லிடப்பேசி வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாா். அதில், ‘தமிழா் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு விழாவில் அவனியாபுரத்தில் உங்களுடன் கொண்டாடி மகிழ்ந்திட விழைந்துள்ளேன்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.