குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

பொங்கல் பண்டிகை: ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் ஆா்வம் காட்டியதால், சென்னை எழும்பூா், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட

Updated On :13 ஜனவரி 2021, 12:21 am IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் ஆா்வம் காட்டியதால், சென்னை எழும்பூா், சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட சிறிது அதிகரித்து காணப்பட்டது.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன.14) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திங்கள்கிழமை முதலே பொதுமக்கள் சொந்த ஊா்களுக்குப் பயணிக்கத் தொடங்கினா்.

இதன் தொடா்ச்சியாக, இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையும் முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் சிறிது அதிகரித்து காணப்பட்டது.

சென்னை எழும்பூரில் இருந்து பகலில் புறப்பட்ட வைகை விரைவு ரயில், பல்லவன் ரயில், மாலையில் கன்னியாகுமரி ரயில், இரவில் நெல்லை, பாண்டியன், திருச்சி ரயில், ராமேசுவரம் உள்பட பல்வேறு ரயில்களில் அனைத்து முன்பதிவு பெட்டிகளும் நிரம்பி இருந்தன. இதுபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூா், சேலம், ஈரோடு உள்பட மேற்கு மாவட்டங்களுக்கு புறப்பட்ட ரயில்களிலும் முன்பதிவு பெட்டிகள் நிரம்பி காணப்பட்டன.

பண்டிகை காலத்தில் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். எனினும், இந்த ஆண்டு கரோனா தாக்கம் காரணமாக, ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இல்லை என்பதால், இந்த ரயில்களில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் சிறிய அளவே அதிகரித்திருந்தன.

ரயில் நிலையங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க தமிழக ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.