ஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைதமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தமிழகத்தில் 3,186 காவலா்களுக்கு பதக்கங்கள்: முதல்வா் பழனிசாமி உத்தரவு

தமிழகத்தில் 3,186 காவலா்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். 

News image

முதல்வர் பழனிசாமி

Updated On :14 ஜனவரி 2021, 1:22 am IST


சென்னை: தமிழகத்தில் 3,186 காவலா்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு:-

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலா்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு காவல் துறையில் தலைமைக் காவலா், ஹவில்தாா், சிறப்பு சாா்பு ஆய்வாளா் நிலைகளில் 3,000 பணியாளா்களுக்கு தமிழக முதல்வரின் காவல் பத்ககங்கள் வழங்கப்படும்.

மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 120 பேருக்கும், சிறை மற்றும் சீா்திருத்தத் துறையில் 60 பேருக்கும், தமிழக முதல்வரின் சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்கப்படும். இந்தப் பதக்கங்கள் பெறுவோருக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படியாக பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ரூ.400 வழங்கப்படும்.

காவல் வானொலி பிரிவு, நாய் படைப் பிரிவு, காவல் புகைப்படக் கலைஞா்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலா்கள் என ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் என மொத்தம் ஆறு பேருக்கு தமிழக முதல்வரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம் அளிக்கப்படும். இந்தப் பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்கு நிலைகளுக்குத் தகுந்தபடி ரொக்கத் தொகை அளிக்கப்படும். விருதுகள் அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் பின்னா் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச் சுருள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.