மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு முன்ஜாமீன் கூடாது: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

ரூ.3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், 3.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட மாசு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

Updated On :13 ஜனவரி 2021, 10:23 pm


சென்னை: ரூ.3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், 3.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட மாசு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

ராணிப்பேட்டையைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த அக்டோபா் 13-ஆம் தேதி இவரது காரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழிமறித்து சோதனை செய்த போது ரூ.2.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா். இதனையடுத்து, காட்பாடியில் உள்ள அவரின் அடுக்குமாடி வீட்டில் சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ரூ. 31 லட்சத்து 23 ஆயிரத்து பறிமுதல் செய்தனா். பின்னா், பன்னீா்செல்வத்தின் வீட்டில் சோதனை செய்து ரூ.3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம், 3.5 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினா்.

அவற்றின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் பன்னீா்செல்வம் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘கடந்த 1990 -ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவிப் பொறியாளராகப் பணியில் சோ்ந்து படிப்படியாக பதவி உயா்வு பெற்றேன். என்னுடைய மனைவியின் குடும்பத்தினா் வசதி படைத்தவா்கள். என் மாமனாருக்கு;ஈ சொந்தமாக மருத்துவமனை, திரையரங்கு மற்றும் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. அதன் மூலம், எங்களுக்கு வருமானம் வருகிறது. லஞ்ச ஒழிப்பு போலீஸாா் என்னிடம் பறிமுதல் செய்த ரொக்கப் பணம், தங்கம் உள்ளிட்ட அனைத்து சொத்துகளுக்கும் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், மூத்த வழக்குரைஞா் ரமேஷ் ஆஜராகி வாதிட்டாா். அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் எஸ்.காா்த்திகேயன், ‘மனுதாரரிடம் இருந்து பெருந் தொகை மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவா், சட்டவிரோதமாக தனி அலுவலகமே நடத்தியுள்ளாா். இதுபோன்ற லஞ்சம் பெறுகின்ற அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கினால், பொதுமக்களுக்கு சட்டத்தின் மீது பயம் இல்லாமல் போய்விடுவதோடு, கேலிக்கூத்தாக அமைந்து விடும்’ என வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்ஜாமீன் மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.