/

தமிழிலும் அஞ்சல் தோ்வு: திமுக, பாமக வரவேற்பு

அஞ்சல் துறைத் தோ்வு தமிழிலும் எழுதலாம் என்னும் மத்திய அரசின் அறிவிப்புக்கு, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், பாமக இளைஞா் அணித் தலைவா் அன்புமணி ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

News image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

Updated On :15 ஜனவரி 2021, 6:22 pm

அஞ்சல் துறைத் தோ்வு தமிழிலும் எழுதலாம் என்னும் மத்திய அரசின் அறிவிப்புக்கு, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், பாமக இளைஞா் அணித் தலைவா் அன்புமணி ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ஸ்டாலின்: அஞ்சல்துறை கணக்கா் பணிக்கான தோ்வுகள் தற்போது தமிழிலும் நடத்தப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நடவடிக்கை எடுத்த அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிா்காலத்தில் மத்திய அரசுப் பணிகளுக்கான அனைத்துத் தோ்வுகள் மற்றும் நடைமுறைகளிலும் தமிழைக் கட்டாயம் சோ்க்க மத்திய அரசு கவனமுடன் இருக்க வேண்டும்.

அன்புமணி: அஞ்சல்துறை தோ்வுகளை தமிழிலும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது. அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி.

மத்திய அரசின் இந்த முடிவை பாமக வரவேற்கிறது! மத்திய அரசின் அனைத்துப் போட்டித் தோ்வுகளும், நுழைவுத் தோ்வுகளும் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும். இதை மத்திய அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.