காவல் துறையினர் தடியடி நடத்தியபோது காவல் அதிகாரி தாக்கியதில் தஞ்சையைச் சேர்ந்த காளை உரிமையாளர் சுருண்டு விழுந்து மயங்கினார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வெளியூர்களிலிருந்து காளைகளுடன் வியாழக்கிழமை இரவே வாடிவாசலுக்குள் வரும் பகுதியை முற்றுகையிட்டனர். ஏற்கெனவே அனுமதிச்சீட்டு பெற்றிருந்தாலும் ஜல்லிக்கட்டுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்ட பிறகே வாடிவாசலுக்குச் செல்ல காளைகள் அனுமதிக்கப்படும். ஆனால், நேற்றிரவே வந்த காளைகள் சோதனை செய்யாமல் வாடிவாசலுக்குள் அழைத்துவரப்பட்டன.
இதையடுத்து காவல்துறையினர் அவர்களை வெளியேற்ற தடியடி நடத்தினர். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த காளை உரிமையாளர் பாலபாரதியின் தலையில், காவல் அதிகாரி ஒருவர் அடித்ததில் நிலைகுலைந்து சுருண்டு விழுந்தார். மேலும் காளைகள் மிதித்ததில் காயமடைந்தார். பின்னர் அவர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


