கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

காவல் அதிகாரி அடித்ததில் சுருண்டு விழுந்த காளை உரிமையாளர்

காவல் துறையினர் தடியடி நடத்தியபோது காவல் அதிகாரி தாக்கியதில் தஞ்சையைச் சேர்ந்த காளை உரிமையாளர் சுருண்டு விழுந்து மயங்கினார்.

News image
Updated On :16 ஜனவரி 2021, 5:23 pm IST

காவல் துறையினர் தடியடி நடத்தியபோது காவல் அதிகாரி தாக்கியதில் தஞ்சையைச் சேர்ந்த காளை உரிமையாளர் சுருண்டு விழுந்து மயங்கினார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வெளியூர்களிலிருந்து காளைகளுடன் வியாழக்கிழமை இரவே வாடிவாசலுக்குள் வரும் பகுதியை முற்றுகையிட்டனர். ஏற்கெனவே அனுமதிச்சீட்டு பெற்றிருந்தாலும் ஜல்லிக்கட்டுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்ட பிறகே வாடிவாசலுக்குச் செல்ல காளைகள் அனுமதிக்கப்படும். ஆனால், நேற்றிரவே வந்த காளைகள் சோதனை செய்யாமல் வாடிவாசலுக்குள் அழைத்துவரப்பட்டன. 

இதையடுத்து காவல்துறையினர் அவர்களை வெளியேற்ற தடியடி நடத்தினர். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த காளை உரிமையாளர் பாலபாரதியின் தலையில், காவல் அதிகாரி ஒருவர் அடித்ததில் நிலைகுலைந்து சுருண்டு விழுந்தார். மேலும் காளைகள் மிதித்ததில் காயமடைந்தார். பின்னர் அவர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.