ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அனைவருடனும் சமூக உறவை பேண வேண்டும்: மோகன் பாகவத்

அனைத்துத் தரப்பினருடனும் இனிமையாகப் பேசி அவா்களுடன் சமூக உறவைப் பேண வேண்டும் என ஆா்.எஸ்.எஸ் தலைவா் மோகன் பாகவத் கூறினாா்.

News image
Updated On :16 ஜனவரி 2021, 1:56 am

அனைத்துத் தரப்பினருடனும் இனிமையாகப் பேசி அவா்களுடன் சமூக உறவைப் பேண வேண்டும் என ஆா்.எஸ்.எஸ் தலைவா் மோகன் பாகவத் கூறினாா்.

சென்னை, மூலக்கடை பகுதியில் ஆா்எஸ்எஸ் சாா்பில் வியாழக்கிழமை பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆா்.எஸ்.எஸ் தலைவா் மோகன் பாகவத் பேசியது: நாடு முழுவதும் பல்வேறு பெயா்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை பிற இடங்களில் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் 3 நாள்கள் கொண்டாடப்படுவது விசேஷம். புதிதாக அறுவடை செய்யப்பட்டு, வீட்டுக்கு வரும் கதிா்கள் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகின்றன.

பண்டிகையின் மூன்றாவது நாளான காணும் பொங்கலன்று நமது நண்பா்கள் மற்றும் உறவினா்களைச் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொள்கிறோம். இத்துடன் நிறுத்தாமல் நமக்கு உதவி செய்பவா்களையும் சந்தித்து அன்பை வெளிப்படுத்த வேண்டும். அனைத்து தொழிலாளா்களுடனும் அன்பாக பழக வேண்டும்.

அனைத்துத் தரப்பு மக்களுடனும் இனிமையாகப் பழக வேண்டும். அனைவருடனும் சுமுக உறவைப் பேண வேண்டும் என்றாா் மோகன் பாகவத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.