தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

போடி அருகே 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

போடி அருகே சடையால்பட்டி கிராமத்தில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image

போடி அருகே 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

Updated On :17 ஜனவரி 2021, 9:17 am



போடி: போடி அருகே சடையால்பட்டி கிராமத்தில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் சீ.ராஜகோபால் மற்றும் குழுவினர் பழங்கால கல்வெட்டுக்கள் தொடர்பாக ஆய்வுகள் செய்து வருகின்றனர். 

போடி அருகே சடையால்பட்டி கிராமத்தில் பழங்கால கல்வெட்டுக்கள் இருப்பதாக அந்த கிராமத்தை சேர்ந்த ஜெ.ஜெயகுமார் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சடையால்பட்டி கிராமத்தில் சென்று பார்த்தபோது கல்வெட்டு ஒன்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சீ.ராஜகோபால் கூறியது: சடையால்பட்டி கிராமத்தில் ஜெயகுமாருக்கு சொந்தமான நிலத்தில் பெரிய அளவிலான கல் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருந்தது. அதனை எடுத்து பார்த்ததில் அது பழமையான கல்வெட்டு போன்று தோன்றியது. ஒன்றரை அடி அகலமும், இரண்டரை அடி நீளமும் கொண்ட கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை படி எடுத்து ஆய்வு செய்தோம்.

மதுரை தொல்லியல் நிபுணர் சொ.சாந்தலிங்கம் உதவியுடன் எழுத்துக்களை ஆய்வு செய்ததில் இந்த எழுத்துக்கள் 800 வருடம் அதாவது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர் காலத்து கல்வெட்டு என்பது தெரிந்தது. 

கல்வெட்டின் விளிம்புகள் இயற்கை சூழல் காரணமாக சேதமடைந்துள்ளது. ஐந்து வரிகளில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.  

குறிப்பிட்ட சமூகத்தினருக்கு நிலம் தானமாக கொடுத்ததற்கான வாசகங்களாக தமிழ் வரிகள் அமைந்துள்ளது. தானம் வழங்கிய இடத்தின் எல்லைகளை குறிப்பிட்டும் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து ஆய்வு செய்தால் இப்பகுதியில் ஆட்சியாளர்களின் ஆட்சி நெறிகளை அறியலாம் என்றார் ராஜகோபால்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.