வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

விழிப்புணர்வு ஏற்படுத்த கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன்: ராதாகிருஷ்ணன்

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News image

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)

Updated On :17 ஜனவரி 2021, 4:07 pm IST

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (ஜன. 17) கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

பின்னர் பேசிய அவர், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி இரண்டும் பாதுகாப்பானவை என்று கூறினார்.

கரோனா தாக்கத்தை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதே அரசின் இலக்காக உள்ளது. மக்களிடையே தடுப்பூசி தொடர்பாக உள்ள அச்சத்தை நீக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.

கரோனா தடுப்பூசிக்காக 6 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தடுப்பூசி செலுத்தும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.