ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பும் மக்கள்: சுங்கச்சாவடிகளில் கடும் நெரிசல்

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் கூட்டத்தின் காரணமாக சுங்கச்சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

News image

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் கூட்டத்தின் காரணமாக சுங்கச்சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.(கோப்புப்படம் )

Updated On :17 ஜனவரி 2021, 2:13 pm

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் கூட்டத்தின் காரணமாக சுங்கச்சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நான்கு நாட்கள் பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உட்பட தங்களது சொந்த ஊருக்கு சென்றிருந்த மக்கள் அனைவரும் தற்போது சென்னை திரும்பி வருகின்றனர். இதன்காரணமாக சுங்கச்சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி, ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சுங்கச்சாவடியை கடக்க காத்திருக்கும் ஏராளமான வாகனங்களின் காரணமாக அங்கு நீண்ட வரிசை அணிவகுத்து நிற்கிறது.

அடுத்ததாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியிலும் மிகக் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு பாஸ்ட் டேக் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் இப்படியான நெரிசல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.