ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாக்குச் சாவடிக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம்: நாகை ஆட்சியர் அறிவுறுத்தல்

வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு செல்லும் போது அனுமதிக்கப்பட்ட ஆவணங்களுடன் முகக் கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image
வாக்குச் சாவடிக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம்
Updated On :5 ஏப்ரல் 2021, 12:17 pm

DIN

வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு செல்லும் போது அனுமதிக்கப்பட்ட ஆவணங்களுடன் முகக் கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்கு காவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை அனுப்பி வைக்கும் பணியை ஆட்சியர் பிரவீன் பி நாயர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, ஆட்சியர் பி. நாயர் செய்தியாளர்களிடம் கூறியது:

வேதாரண்யம் தொகுதியில் 271 வாக்குப் பதிவு மையங்களும், 44 துணை வாக்குப் பதிவு மையங்களும் அமைந்துள்ளன. இங்கு, கருப்பம்புலம், தேத்தாக்குடி, வாய்மேடு, தலைஞாயிறு உள்ளிட்ட 14 மையங்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. 

Story image

நாகை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1861 வாக்குச் சாவடிகள், 350 துணை வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவை மேற்கொள்ள 8, 975 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவை தவிர, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் 3722  பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மாவட்டத்தில் 931 வாக்குப் பதிவு மையங்கள் காணொலி காட்சி மூலம் கண்காணிக்கப்படவுள்ளது. முகக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்து, கையுறை அளித்த பின்னரே வாக்குப் பதிவுக்கு அனுமதிக்கப்படும் என்றார். 

வேதாரண்யத்தில் வாக்கு சாவடி மையங்களுக்கு வாக்கு பதிவு இயந்திரம் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைக்கும் பணியைத் தொடங்கி வைத்த ஆட்சியர் பிரவீன் பி நாயர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.