47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கரோனா எதிரொலி: புதுச்சேரியிலும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் இரவு நேரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கரோனா எதிரொலி: புதுச்சேரியிலும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்
Updated On :9 ஏப்ரல் 2021, 5:48 am

DIN


புதுச்சேரி: கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் இரவு நேரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறப்பித்திருக்கும் புதிய உத்தரவில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரியில் அதிகளவில் மக்கள் கூட, திருவிழாக்கள் நடத்த  தடை விதிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.

மேலும், இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை கரோனாவை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஆட்டோ  மற்றும் வாடகைக் காரில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் குறைந்த அளவிலான நபர்களே பங்கேற்க வேண்டும்.

கோயில்களில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

பேருந்துகளில் அதிகளவிலான பயணிகள் அனுமதிகக்கக் கூடாது.

முகக்கவசம் அணியாமல் பொதுவிடங்களுக்கு வருவோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.